நீ உணவு ஊட்டியபோதும்
உன் மடியில் தலைவைத்து உறங்கியபோதும்
நீ எனக்கு அன்னையே!
'சிநேகிதியாய்' நான் உணர்ந்திருக்கிறேன்!
கதைகள் பல பேசியபோதும்
பிடித்தவற்றை பகிர்ந்துக் கொண்டபோதும்
நீ என் தோழியே!
'சகோதரியாய்' உன்னை நினைத்திருக்கிறேன்!
எனக்காக நீ பரிந்து பேசியபோதும்
உன்னுடையதை என்னுடையதாக்கியபோதும்
நீ என் உடன்பிறந்தவளே!
'விரோதியாய்' உன்னை திட்டியிருக்கிறேன்!
எனக்கு பிடித்த பாடலை
நீ வேண்டுமென்றே மாற்றும்போதும்
நீ நேசித்தவற்றை
நான் குறை கூறியபோதும்
நீ என் பிரியமான எதிரியே!
'வேலைக்காரி'யாகவும்
உன்னை ஆட்டுவித்திருக்கிறேன்!
இப்படி எல்லா முகங்களிலும்
நீ என்னுடதான் வாழ்ந்திருக்கிறாய்!
இன்று எங்கே உன் திருமுகம்?
கதைகளிலும் திரைபடங்களிலும்
வரும் ஆவியைப் போலாவது
வந்து விட்டு செல்...
உன் வாசனையையாவது
உணர்ந்து கொள்கிறேன்!
